-சரஸ்வதி ராசேந்திரன்

அகிலத்தைக் காப்பவனே
ஆதிரை மேய்த்தவனே
யசோதை மைந்தனே                          Cute Lord Krishna
யமுனை நீராடிய மாதவனே
எழில்முகம் கொண்டவனே
ஏழுமலை வாசனே
மண்ணைத் தின்றவனே இம்
மண்ணுலகம் ஆள்பவனே
கோபியர் கொஞ்சும் கண்ணனே
கோவர்த்தன மலை எடுத்தவனே
பால்வடியும் வதனம் கொண்டவனே
பிரபஞ்சத்தை வாயில் காட்டியவனே
குறும்புத்தனம் காட்டியவனே
குழலூதும் கண்ணனே
ஏற்றித் தொழுகிறோம்
எளியவரைக் காத்துவிடு உன்
பிறந்த நாளில் உன் பொன்னடி
போற்றுவோரைக் காத்துவிடு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *