ரா.பார்த்தசாரதி

 

எழுபத்தொன்று ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்

பெயரளவில்  வளர்ச்சியினை   கண்துடைப்பாக காட்டுகின்றோம்

முக்கிய திட்டங்களுக்கு அரசாங்கம், முன்னுரிமை கொடுப்பதில்லை

நதிநீர்  இணைப்பும்,  விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படவில்லை !

 

இன்று சுதந்திர நாட்டின் நிலைமை என்ன   நினைக்கத்தோன்றுதே

அண்டை மாநிலங்களே  உதவி  அளிக்க மறுக்கிறதே

ஜாதி, மத  பிரிவினையால் எல்லா திட்டங்களும் முடக்கப்படுகிறதே

அரசியல் தலைவர்கள் ஒற்றுமை விலகி, பிளவு ஏற்படுகின்றதே !

 

அன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்டனரே

இன்றைய அரசியல் தலைவர்கள் தனக்காக பாடுபடுகின்றனரே

லஞ்சமும், தீவிரவாதமும் எங்கும் தலைவிரித்து ஆடுகின்றதே

கோடி, கோடியாக பணம் மந்திரிகள் கைகளில் புழங்குகிறதே     !

 

இன்று சுதந்திரமாக எதிர்க்கவோ, எழுதவோ துணிவு    இல்லை

பத்திரிகைகளும், இலைமறை,காய்மறைவாய்  வெளிப்படுத்துதே

பத்திரிகை சுதந்திரமும், அரசியல் ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறதே

அரசியல் செல்வாக்கால் எல்லாவற்றையும் அடிபணிய வைக்கிறதே !

 

சுதந்திரத்திற்காக  தன் உயிரையும் தியாகம்  செய்தனர்  அன்று

சுதந்திரமாக கோடிகணக்கில் பணம் கொள்ளையயடிக்கின்றனர் இன்று

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  அரசியல் அராஜகம்

மக்களே ! இன்றே எழுமின் கடைசி வரை போராடி எதிர்த்து வெல்வீர்!

 

சுதந்திர நாட்டில், சுதந்திரம் எங்கே என கேட்க தோணுதே?

மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல்  அமையுமா

நல்ல அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டாமா

எழுபத்தோராவது சுதந்திர தினம் இதற்கு விடை காணுமா ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *