கவியோகி வேதம்

 

இருட்டைக் குத்திட,- கதிரும்  பிறந்தது;

இன்பனி உருண்டிட இலைமுளை துளிர்த்தது;

சுருட்டிய பாயும் தூக்கம் கலைந்தது;

துயராம்  ‘சேரி’யின்  ‘விடியல்’ வந்ததா?

.

ஆண்யானை விந்தில் ஆச்சர்யம் வளர்ந்தது!

அருகம் புல்லிலும்  புவனம் தெரிந்தது;

மாண்ட அரசரால் சரித்திரம் புரிந்தது!

மண்புரள்  ‘வேட்டி’யால் வறுமை தீர்ந்ததா?

 

. பன்றியும் குழந்தையும் ஒன்றாய்ப் புரண்டு,

பள்ளமும் சேறும் காதல் புரிந்து,

குன்றிய வயிற்றில் வாயுவே நிரம்பும்

குலமகன் வாழ்வும் என்றுதான் துலங்கும்?

 

. மனைகள் பணத்தால் மாளிகை ஆகலாம்;

‘மாண்பும்’ கட்சியால் மந்திரி ஆகலாம்;

வனைவுறும் நேர்மையே நிலமெங்கும் பரந்து,

வளர்ந்(து)என் ‘றிந்தியா’ வல்லர சாகும்?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *