கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
பலாவின் சுளையைப் புதைப்பு….!
அபிராமி அந்தாதி படித்த பாதிப்பில்….!
“நீலி மகிடன்மேல் நின்றவள், கொன்றவள், –
காளி சிவந்து கருத்தவள்கா -பாலியாய் –
நான்முகன கந்தை நமச்சிவாயர் கொய்திட –
தான்உகந்துஏற் றாள்கைத் தலம்”….கிரேசி மோகன் ….!