-ராஜகவி ராகில்

கோடை நிலமழை
உன் வருகை

மலர்கள் பார்த்துப் பேசுகிறேன்
உன்னோடு உரையாடிய திருப்தியாதலால்

அருகில் இருக்கின்ற இலைகள் கூட
வாசமாகி நேசிக்கின்றன உன்னை

காற்றைப் பிடித்துப் பிடித்து பார்க்கிறேன்
உன் சொற்கள் இருக்கின்றனவா என்று

மழைத் துளிகளை விடக் குளிர்கின்றன
உன் வார்த்தைகள்

கிளியிடம் உன் பெயர் சொன்னேன்
அது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது
கனிகள் மறந்து

உன்னைக் கண்ட
நேற்றுக் கூட இன்றாகத்தான் இருக்கும்
என்றுமே எனக்கு

உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என
எழுத்துக்களெல்லாம்
வரிசையாக வந்து நின்று அடம் பிடிக்கின்றன
ஆசையுடன்

கடலில் குளி நீ
காலடியில் முத்துச் சிப்பிகள் நிரம்ப
ஐஸ் மழை சிவப்பாகியது
உன் மேனியில் விழுந்து

பனிக்கட்டிகள்
உனக்காகக் காத்திருக்கின்றன
அழகான வெயிலாக
குளிரான வெப்பமாக நீ வருவாய் என்று!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *