பங்குச்சந்தையின் இன்றைய உச்சம் நிலைக்குமா?
பவள சங்கரி
தேசிய குறியீட்டு எண்ணும், மும்பை குறியீட்டு எண்ணும் (நிஃப்டி, சென்செக்ஸ்) தங்கள் தகுதிக்கு மீறிய உச்சத்தை தினந்தோறும் தொட்டுக்கொண்டிருக்கின்றன. பல பங்குகள் 100 மடங்கு, 200 மடங்கு என்று விலை ஏறியுள்ளன. இதனால் கோடீசுவரர்கள் ஆனவர் பலர். தகுதிக்கு மீறிய வளர்ச்சி என்றும் நிலைத்து நிற்பதில்லை. 100 ரூபாய் பங்கு 110 க்கோ அல்லது 120க்கும் கூட விற்கலாம். 200 ரூபாய்க்கும்கூட விற்கலாம். ஆனால் 1000 ரூபாய்க்கு விற்றால் அது எப்படி நிலைத்து நிற்கும்? இது திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களால் ஒரு மாயையான உச்சத்தை அடைந்துள்ள நிலை. இந்த நிலையில் இது என்று வேண்டுமானாலும் அதள பாதாளத்தை அடையலாம். பல இலட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடலாம். இந்த உச்சம் நிலைத்து நிற்பது சாத்தியமில்லாதொன்று என்பது உறுதி. அமெரிக்காவில் 1987 இல் பங்குச்சந்தையில் Black Monday ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்றதொரு வீழ்ச்சியை நாம் சந்திக்க நேர்ந்தால் நம் பொருளாதாரமே வீழ்ச்சியடையக்கூடும். நம் மத்ய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இதில் தலையிட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது அவசியம். இன்று சீனாவின் மத்திய வங்கி பங்குச்சந்தை பற்றி கூறியுள்ளதும் கருத்தில் கொள்ளத்தக்கது..