நிலக்கரி அபாயம்!

0

பவள சங்கரி

தலையங்கம்

உலகளவில் நிலக்கரி அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. நிலக்கரி அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் ஆக்சைட் அதிகமாக வெளியேறுகிறது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்தியாவில் மூன்று கோடியே 30 இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். முதல் இடத்தில் உள்ள சீனாவில் 9 கோடியே 90 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நுரையீரல் சம்பந்தமான பல்வேறு வியாதிகள் அதிகமாகின்றன. விழித்துக்கொண்ட சீன அரசு எடுத்துக்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு 50% குறைந்துள்ளது. இதே நேரத்தில் இந்தியாவில் இந்த பாதிப்பு மேலும் 30% அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசடைகிறது. தில்லி, நொய்டா போன்ற பகுதிகளில் காற்று மாசடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பிரச்சனையை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *