பவள சங்கரி

டி.பி. எனும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 500 உரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை மத்ய அரசு வகுத்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் இருந்தால் தயவுசெய்து இந்தச் செய்தியை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே. ஆண்டு தோறும் 28 இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் மட்டும் இந்த காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 17 இலட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுகிறார்களாம். அரசு இலவசமாக இதற்குரிய மருத்துவத்தை ஆரம்பச் சுகாதார நிலையம் மூலமாக வழங்கிவந்தும் பாதிக்கப்பட்ட 11 இலட்சம் பேர்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ள முன்வருவதில்லை. இதில் 25 இலட்சம் பேருக்கு மாதம் 500 உரூபாய் உதவித் தொகையாக அளிக்கவும், 2025க்குள்ளாக 90% காச நோயை ஒழிக்கவும், 2030க்குள் காச நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95% தடுத்து நிறுத்தவும் மத்ய அரசு முடிவு செய்து திட்டம் வகுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *