மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 5
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்
மறுநாள் காலை, சைமன் எழுந்த போது, மெட்ரீனா, அயல் வீட்டிலிருந்து ரொட்டி கடன் வாங்கச் சென்று விட்டாள். அந்தப் புதிய மனிதன், பெஞ்சின் ஒரத்தில் அமர்ந்து கைகளைக் கூப்பிக் கூரையை பார்த்த வண்ணமாக உட்கார்ந்திருந்தான். முகம் முந்தைய இரவை விடத் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருந்தது.
சைமன், அவனைப் பார்த்து அவனுக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டான்.
“எனக்கு ஒன்றும் தெரியாது”
“உன் பெயரென்ன?
“மைக்கேல்”
“மைக்கேல், மனிதனுக்கு உணவும், உடையும் தேவை. உன்னைப் பற்றி நீ சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். செருப்புத் தைக்கும் வேலையை நீ கற்றுக் கொண்டால் என்னுடன் தங்கியிருக்கலாம். உணவும் உறையிடமும் கொடுக்கிறேன்” என்றான். மைக்கேலும் அதற்கு இணங்கினான். சைமன் செருப்புத் தைக்கச் சொல்லிக் கொடுத்த போது மைக்கேல் மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டான். இரண்டு மூன்று நாட்களில் மிகவும் திறமையுடன் சைமனின் உதவி இல்லாமல் செருப்புகள் தைக்கத் தொடங்கி விட்டான். அவன் தைத்த செருப்புகள் போல் இது வரையிலும் ஒருவரும் தைக்கவில்லையாதலால், அவன் புகழ் எங்கும் பரவியது. பிற ஊர்களிலிருந்து மக்கள் வந்து செருப்புத் தைக்கக் கொடுத்தனர். சைமனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.
தொடரும்