download (1)

 

“இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை
மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் –
நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி –
உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “….கிரேசி மோகன் ….

 

வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா
அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தை,
கண்ணனுனைக் காணாது போனாலென் கண்கள்முக்
கண்ணனைக் காணப்போம் காண்….கிரேசி மோகன்….!

சிவராத்ரியுடன் ‘’பனி’’ சிவசிவா என்று விலகும்…பனிக்குக் காரணமான பெருமாள்(மார்கழிக் கண்ணன்) சிவநாமம் ஜபிக்கிறார்….!

’’தாணு(சிவன்) சிவராத்ரி தூக்கமேனோ, பாற்கடலில்
வேணு(திருமால்) தூக்கத்தை விட்டொழித்தார்: -மோன
முனிகுரு தட்ஷிணா மூர்த்தியின் நாமம்
பனிமார் கழியோன்ஜ பிப்பு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *