இவ்வார வல்லமையாள்ர்களாக விஞ்ஞானி சுமிதா மித்ராவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இவர் அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தின் பாராட்டுக்கும், அங்கிக்காரத்துக்கும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்

சுமிதா மித்ரா நானோபார்ட்டிகிள்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்சொத்தைகளை அடைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். இது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு மேம்பட்டதாகவும், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது

3எம் எனும் கம்பனியில் வேலை செய்தபோது இதை கண்டுபிடித்த்து இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இது பலனளித்துள்ளது.

இது தவிர பல்சொத்தைகளை அடைக்கும் பசைகள், நானோகாம்பொசிட் வகை தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சுமிதா மித்ரா கண்டுபிடித்துள்ளார். 3எம் கம்பனியில் இருந்து ஓய்வுபெற்று சொந்தமாக தொழில்நுட்ப கம்பனி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்

இவர் அமெரிக்காவில் வசித்தாலும் இவரது சொந்த ஊர் கல்கத்தா ஆகும். கல்கத்தா ரெசிடென்ஸி கல்லூரி மாணவி ஆவார். இவரது கணவர் சாம் மித்ரா ஆவார். தன் கணவருடன் இணைந்து தான் வசிக்கும் மின்னியபொலிஸ்- செயிண்ட்பால் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் குறித்து உரை நிகழ்த்துவதில் தன் விடுமுறைகளை இவர் செலவிடுகிறார்

அறிவியல், மாணவர் மேல் கொண்ட அன்பு, உழைப்பு, ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுமிதா மித்ராவை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வல்லமையாளர் சுமித்ரா மித்ராவுக்கு நம் நல்வாழ்த்துகள்

இவரை பரிந்துரைத்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு நம் நன்றி

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (262)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *