கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பசு உவாச….!
——————————–
எண்ணம் ஒடுங்கிட ஏகாந்தம் கூடிட
கண்ணன் கருநீலக் காயாம்பூ -வண்ணன்
நினைப்பும் நாலுகாலன் நானும் கலக்க,
கனைப்பை மறந்தேனே காண்….!
”மாலோல பாகவதர், மாடை மடியிட்டு
தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….கிரேசி மோகன்….!