கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
அண்ணா பலராமன் நலம்தானா -பின்னால்
இதுபோ லெனைநீ இங்கிதமாய்க் கேட்டு
பதிலொன்(று) எழுதிப் போடு….!
கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி
யசோதையாள் நந்தகோபன் யாதவரைக் கேட்டு
விசாரித் ததாக விளம்பு….!
”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!
நீராடை பூண்ட நிலத்தை உழுதன்று
ஓரா லிலையில் உறங்கிய -சீராளன்
போரானை கொம்பொசித்து நூறோர் கதைமுடித்த
நாரா யணனே நெறி….கிரேசி மோகன்….!