சமுதாயப் பிரச்சனை?
பவள சங்கரி
2 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் 30% மாணவர்கள் தேர்வுகளில் ஏற்படும் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாதிப் பிரச்சனை , தேர்வுகள் போன்ற காரணங்களால் இது போன்று அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக நடுவண் குற்றவியல் ஆவணக் காப்பகத்திலிருந்து தகவல் தரப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் மேலவையில் அறிவித்துள்ளார். சமுதாயப் பிரச்சனைகள் காரணமாக மாணவர்கள் இறப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம். கல்வித் திட்டங்களிலும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வருவதோடு இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், மருத்துவ மனநல ஆலோசனைகளும் அவசியமாகிறது.