மனம் வென்றிடும் நேர்
நாகினி
மனம் வென்றிடும் நேர்..
(நொண்டிச்சிந்து)
உண்மையில் அன்பினா லே .. இனி
.. உள்ளொன்று வைக்காத பேச்சினி லே
சண்டைகள் வந்தாலு மே .. உயர்
.. சங்கட மேதுமி லாதோடு மே
தங்கிடும் அன்புட னே.. உயர்
.. தானங்கள் செய்கின்ற தொண்டுட னே
மங்காத பேறுபெற் றோர்..வாழும்
.. மண்ணிதை வாழ்த்திட ஆவலுற் றோர்
வேண்டிடும் நல்வரம் வந்தினி தே.. பேர்
..வெற்றியை வாங்கிடும் காலமி தே
தூண்டிய ஊக்கமும் தந்தநல் லோர்..வாக்கு
.. துன்பத்தை நீக்கிட வந்தசான் றோர்
சொல்லிய அன்புடன் வாழ்வது தான்.. மேன்மை
.. சொந்தமும் பந்தமும் உற்சாகத் தேன்
துல்லிய மாகவே பெற்றிடுந் தேர்.. என்றே
..தூயம னத்தாசை வென்றிடும் நேர்!
… நாகினி