கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்
கண்ணன்கை கோர்த்து காண்டீபர் செல்வதை
கண்ணில்லா மன்னரதைக் கேட்டதும் -கண்ணன்காண்
மந்திரி சஞ்சயா மன்னனெனை வாட்டாதே!
எந்திரி போநீ எழவு’’….!
திருதராட்டிரன் கோபம் கண்டு சஞ்சயன் சுதாரித்து….!
அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமர்
கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
வாடிநின்று பார்த்த விதம்….கிரேசி மோகன்….!