ஆ. செந்தில் குமார்.

 

 

 

 

 

 

 

 

 

 

குயில்கள் பாட்டு இசைக்க
மயில்கள் நடனம் புரியும்!
கிளிகள் கொஞ்சி மகிழ
கொக்கு ஒற்றைக்காலில் நிற்கும்!
புலிகள் சீறிப்பாய சிறு
முயல்கள் பதுங்கி மறையும்!
காட்டெருமை கரடி இருக்க
காட்டுப்பன்றிக் கூட்டம் மேயும்!
ஓநாய் நரியின் ஊளை – இரவில்
அச்சம் கொள்ள வைக்கும்!
யானைப்பிளிரல் சத்தம் கேட்க
வரையாடு ஒன்று கத்தும்!
மான்கள் துள்ளி ஓட – அதை
சிறுத்தை பாய்ந்து பிடிக்கும்!
வானரங்கள் யாவும்
மரக்கிளைகளில் தாவும்!
வண்டு தேனை அருந்த
மலர்கள் பூத்துக் குலுங்கும்!
வானுயர்ந்த மரங்களனைத்தும்
காற்றில் அசைந்து ஆடும்!
இயற்கை எழில் கொஞ்சும்
முதுமலையைக்காண மனம் கெஞ்சும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *