தன்வந்திரி பீடத்தில் ஆண்/பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்

0

 

(கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் )

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ

முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற 31.03.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம்

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 13 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.

சுயம்வர கலாபார்வதி யாகம்

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டிசுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம்

பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம்.

மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார். சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள்கட்டுப்படுத்த கிருஷ்ணர்

ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம்.. மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க, நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம். சந்தான கோபால ஹோமம் சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக் கூடிய அபாயத்தைக் குறைக்கும். மேலும், அது சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்து ஒரு குழந்தை பாதுகாக்க உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. நன்மை குணங்களும், ஒரு குழந்தைக்கு வரம் அளிக்கிறது. பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது.

மேலும் இந்த ஹோமங்களில் பங்கேற்க்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசீர்வதித்து அன்னதானமும் வழங்கப்படும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in

Email: danvantripeedam@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *