விளம்பியே வருக!! விரும்பியது தருக!!

0

ஏ.ஆர்.முருகன்

 

விளம்பி ஆண்டிலேனும்

கிளம்பிவருமா?காவிரி!

புலம்பவைத்தமத்தியரசு

மேலாண்மைஅமைக்குமா?

வேளாண்மையைக்காக்குமா?

முத்துநகரில் வித்தைகாட்டும்

தாமிர ஆலை மூடப்படுமா??

காஞ்சு போன டெல்டாவில்

பாஞ்சு வருது!!தண்ணீரல்ல

மீத்தேன் வாயு!!உறிஞ்சுவது

மண்ணையல்ல!! உயிரை!!

பச்சைப்பிரதேசம் வறண்ட

பாலைவனமாகி விட்டால்

பசிக்கு சோறு கிடைக்காது!!

வருங்காலம் நினைத்தாலே

கண்ணைக்கட்டுகிறது!!

இத்தனை பிரச்சினைகள்

எள்ளி நகையாடினாலும்

துள்ளிவரும் புத்தாண்டு

அள்ளித்தராதா?ஆனந்தத்தை!

சொல்லொனாத்துயர் ஓடாதா?

வெள்ளந்திதமிழர்களுக்கு

உள்ளார்ந்த வேதனை தீர..

தில்லிக்கு ஞானோதயம்தந்து

நல்ல தீர்ப்பைக்கொண்டுவருமா?

எதிர்பார்க்கும் ஈர விழிகளோடு

துதித்திடுவோம் சித்திரையை!!

பதித்திடுவோம் முத்திரையை!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *