மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

புரட்சி எழ வேண்டும் என்று நீ
முரசு கொட்டுகிறாய்!
உலகத்தை மாற்ற நாமெல்லாம்
கலகம் செய்கிறோம்!

பரிணாம வளர்ச்சி அதுதான் என்று
விரைவாகச் சொல்கிறாய் !
உலகத்தை மாற்ற நாமெல்லாம்
கலகம் செய்கிறோம்!

ஆனால் அடி, தடி, உடைப்பு, தீ வைப்பு
கடை அடைப்பு,
வேலை நிறுத்தம் – இவை என்றால்
எனக்குப் பிடிக்காதென்று
உனக்குத் தெரியாதா?

உடனே என் பெயரை நீக்கிவிடு
எதிர்க்கும் புரட்சிக் குழுவில்!
எல்லாம் நல்லதாய் முடியுமென
உனக்குத் தெரியாதா?

எல்லாம் இனிதாய் முடியும்!
இனிதாய் முடியும்!
மெய்யாகத்
தீர்வு உள்ளது உன்னிடமெனக்
கூறுவது நீயே!

திட்ட மென்ன சொல்வாய்?
நீயும் பங்கெடு என்றென்னைத்
தூண்டுகிறாய்.

முடிந்ததைச் செய்கிறேன்!
வெறுப்பு மனம் கொண்டோர்க்கு
கறுப்புப் பணம் தா என்றால்,
காத்திரு என்று நான் நீங்குவேன்.
எல்லாம் இனிதாய் முடியும்!
இனிதாய் முடியும்!

அரசியல் சட்டத்தை மாற்றுவதாய்
உரைப்பது நீ!
நாங்கள் யாவரும் உனது
மூளையை மாற்ற முனைகிறோம்!

கல்வெட்டு எழுத்தென்று
சொல்வது நீ !
கல்வெட் டென்று நீ கருதினால்
கற்பனை மனத்தை விட்டு
மெய் உலகுக்கு வா!

மாசேதுங் படத்தை தூக்கிக் கொண்டு
வாசல் முன்னே காட்ட வந்தால்
வையத்தில் யாரும் உன்னை
ஏறெடுத்துப் பாரார் !

தொல்லைகள் மெல்ல நீங்கி
நல்லதாய் முடியும்,
எல்லாம் நல்லதாய் முடியுமென
உனக்குத் தெரியாதா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *