எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே
கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும்
படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும்
படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே !

நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்
நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும்
குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்
குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் !

தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி
தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது
நுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின்
வருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் !

வாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள்
வருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும்
மோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள்
சேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும் !

வள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார்
இனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்
சொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்
வெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது !

சாதிபற்றிச் சொல்லவில்லை சமயம்பற்றிச் சொல்லவில்லை
நீதிபற்றி சொல்லுவதில் நியாமும் நிறைந்துளது
கடவுள்பற்றிச் சொல்லவில்லை கட்சிபற்றிச் சொல்லவில்லை
கட்டாயம் செய்வதனை கண்ணியமாய் சொல்கிறது !

இலக்கியத்தைப் படைப்பார்கள் இங்கிதமாய் படைப்பதற்கு
ஏற்றபல பாடங்களை வள்ளுவத்தில் படித்திடலாம்
நலந்திகழ மனம்நிறைய நாலுபேர்க் கேற்றபடி
நற்படைப்பைப் படைப்பதற்கு நாம்படிப்போம் வள்ளுவத்தை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *