கொடுத்த அல்வா போதும்!

0

சேசாத்திரி பாஸ்கர்

தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ஆன சந்திப்பை- நிகழ்வை கணினியில் உலவ விட்டு தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டிகொண்டு சிறையை தவிர்க்க நினைப்பது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது .நேற்று கூட ஒரு வழக்கில் பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து இருக்கிறது . ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் சரண் அடைய வேண்டும் என்று ஒரு விதியை நீதிபதி சொல்லிருக்கிறார்.–கடைசி வரை அவர் சிறைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வழியில் தன்னை விடுவித்து கொள்ள நினைப்பது பெரிய தவறு . ஒரு பிரபல நடிகர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இப்படி செய்வது அடுத்தவர்க்கு முன் உதாரணமாகி விடும் சட்டத்தின் முன் பிரியா , சூர்யா , சேகர் எல்லாம் சமம்.சட்டம் அதை செய்யாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறது .ஒரு சாமான்யனுக்கு இதை எல்லாம் பார்த்தால் ஏன் கோபம் வராது ?இது பற்றி அவருக்கு மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பினேன் . இரண்டு முறை பதில் சொன்ன அவர் மூன்றாம் முறை பதில் அளிக்கவில்லை — சட்டத்திற்கு பயந்து அல்ல , மதிப்பளித்து அவர் சரண் ஆகியிருந்தால் அவர் மேல் இருக்கும் மதிப்பு அதிகமாகி இருக்கும் .அவர் கொடுத்த அல்வா போதும் .அல்லது அவர் தனது அலுவலக இருக்கைக்கு பின் உள்ள “When God is with me why there should be fear” என்ற வாசகத்தை எடுத்து விட்டால் குறைந்த பட்சம் என்னை போன்ற அரை குறைகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *