மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++

கவர்ச்சி மேனகா !

என்ன காரியம் செய்தாய் ?

முட்டாள் ஆக்கினாய் ஒவ்வோர் ஆணையும் !

முட்டாள் ஆக்கினாய் !

கவர்ச்சி ஊர்வசி !

என்ன காரிய செய்தாய் ?

எல்லா விதிகளை மீறினாய் !

விதிகளை மிதிப்பதை

அனைவ ருக்கும் காட்டினாய் !

கவர்ச்சி மேனகா !

என்ன காரியம் செய்தாய் ?

எல்லா விதிகளை முறித்தாய் !

பொழுது வெளுத்த ஓர்நாள்

உலகு காத்தி ருந்தது,

ஓர் கவர்ச்சிக் கன்னி வருகைக்கு

ஓவ்வோர் ஆணையும் மயக்கி

அடிமைப் படுத்தி

மூடனாய் ஆக்கிட !

உலகு அனைத்திலும் உன்னதக்

கவர்ச்சிப் பாவை நீதான் !

எப்படித் தெரியும் உரைப்பாய்

இப்புவி காத்துள துனக்காய் ?

இப்புவி காத்துள துனக்காய் ?

கவர்ச்சி மாதே !

எப்படி அறிவாய் நீயும்

தப்பா தெல்லாம் வீழும் என்று ?

கவர்ச்சிக் கன்னி

உன்பீடச் சிகரம் எட்டா உயரம் !

உன்காலில் வீழும் உலகு !

பொன் பொருள் யாவும் ஈந்தோம்

உன்னருகே அமர,

உன் புன்னகை காண,

உன்னிழலில் குளிர !

கவர்ச்சி அணங்கே !

புவிப் பேரழகி !

புதுப் பேரழகி !

உன்னழ குக்கு ஈடில்லை

உலகில் !

ஒவ்வோர் ஆணையும்

உலகில்

முட்டாள் ஆக்கினாய் நீ !

முடவன் ஆக்கினாய் நீ !

முதிர்ச்சி

அறிவில் லாத நீ !

+++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *