சுற்றுச் சூழல் சுத்தமாவது என்று!

0

 

 

அ.ஸ்ரீதேவி

 

 

 

நீரோடும் ஆறுதான்  அன்று

சாயநீரோடும் ஆறானதே இன்று

சகலமாய் இருத்த நீரோடை அன்று

சாக்கடை நீர் செல்லும் நீரோடை என்று?

 

ஏக்கரில் தோப்புகள் அன்று

எல்லாம் குப்பைகளே இன்று

வளர்ந்து செழித்த மரங்கள் அன்று

வானுயிர் கட்டிடமே இன்று

 

இயற்கை அன்னை எழில் முகம் காட்டுவது என்று?

 

தூயக் காற்றாம் அன்று

நச்சுப் புகைக்காற்றாம் இன்று

மரம் நச்சைப் புகை சுவாசித்தது அன்று

நாம் நச்சைப் புகை சுவாசிக்கிறோம் இன்று

 

தென்றல் வீசுவது என்று?

 

 

குயிலின் இன்னிசை அன்று

குறையாத இறைச்சல்தான் இன்று

தேனிசை  தான் என்று?

நன்செய் புன்செய் விளைந்த நிலம் அன்று

நடுகற்கள் முளைத்தபூமியோ இன்று

நாம் திருந்துவது என்று?

 

அமிர்த மழைநீராம் அன்று

அமில மழையாம் இன்று

அண்டம் மாறுவது என்று?

 

மகிழ்ச்சியாய் குழந்தைகள் ஓடின அன்று

மருத்துவமனையே வீடு இன்று

மதியைத் தேடுவது என்றோ ?

சுற்றுச்சூழல் சுத்தமாகுமே அன்று

சுற்றுச் சூழல் காப்போம்

 

புவியைமீட்போம்…….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *