சு.திரிவேணி

உலக சகோதரத்துவம்
நோக்கிய பயணத்தில்
சக மனிதனை நேசிக்க
இயலாதவர்கள் நாங்கள்
வசதிகளுக்காக வாழும் உரிமை
பறிப்பது எம்மியல்பு
நித்தம் செத்துப் பிழைக்கும்
நித்திய நரகம் கடந்தால்
காத்திருக்கிறதாம் சொர்க்கம்!
அவ்வின்ப வாழ்வு குறித்தான
கற்பனையிலேயே முடிகிறது
எங்கள் வாழ்வு
கண்முன்னே பல கொடுமைகள்
கடந்து வருகிறோம்
சகித்துக் கொள்கிறோம்
பெற்ற தாயை
பிறந்த பூமியை
ரத்த உறவுகளை
பழைய நினைவுகளை
விடைபெற்றுச் செல்கிறோம்-
ஈரமில்லா இதயங்களை நோக்கி!
வழி விடுங்கள்
சடலங்களைக் கடந்து தான்
எங்கள் சொர்க்க வாழ்வை
எழுத வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *