இருவருமே இயற்கையாய் உரை யாடுதற்கு
=====இலகுவாய்த் தண்ட வாளத்தில் நடந்தோம்.!
வருகின்ற பேராபத்தை உணர வழியில்லை
=====வந்தவேக மிகுரயிலைக் கவனிக்க வில்லை.!
ஒருவர் இறக்க ஒருவருயிருக்கு ஊசலாட
=====உடனொரு மாற்று இருதய சிகிச்சையால்.!
இருவருயிர் ஓருயிராக இதயம் ஒன்றாகி
=====என்றும் என்இதயத்தில் நீயே வாழ்கிறாய்.!

அன்றுபெற்ற இதய தானத்தால் இன்றும்
=====என்றும் காதலுக்கு மரணம் இல்லையாம்.!
மென்று விழுங்கினாலும் உண்ட உணவு
=====மெல்ல இரைப்பை செல்லநீயே காரணம்.!
நன்றுடன் வாழ்ந்திட நீயளித்த இதயம்
=====நன்றே இயங்கி ஒன்றானது ஊனுடம்பில்.!
நன்றி சொல்கிறேன் நல்லுளம் மிக்கவளே
=====நீ இறந்தாலுமுன் இதயம் இயங்குகிறது.!

நேற்றிருந்தோர் இன்றிலை எனும் விதியை
=====நியதியை வென்று விடுமோ மருத்துவம்.!
மாற்றங்கம் பொருத்து மொரு மகத்தான
=====மருத்துவத்தால் மறுபடியும் வாழ முடியும்.!
கூற்றுவனை வெல்லவும் முடியும் மென்கிற
=====கூற்றை..கொடையுள்ளம் எளிதாய்த் தரும்.!
ஆற்றவொணாப் பெருந் துயரைக் களைந்து
=====என்றுமென் இதயத்தில் குடி கொண்டாய்.!

===================================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-05-18
நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *