எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

பாடியகுயில்   பறந்தோடிவிட்டது
பாட்டுக்கேட்ட  யாவருமே
பரிதவித்தே நிற்கின்றார்
பலமொழிகள் குயில்காணாப்
பார்த்தேங்கி அழுகிறது
பாரதத்தாய் இசைமகளைப்
பறிகொடுத்து ஏங்குகிறாள்  !

இசைஞானி வசமாகி
இசைத்தபாடல் எத்தனையே
எம்ரகுமான் இசைக்கோப்பில்
இனித்தபாடல் இதயமெலாம்
இசைமகளை இனங்கண்ட
இசையாளர் பலருமிப்போ
இசைமகளின் முகங்காணா
ஏக்கமுற்று இரங்குகின்றார் !

சிங்கார  வேலனைத்
தந்துவிட்ட இசைக்குயிலைச்
சிந்தித்து சிந்தித்து
இசையுலகு அழுகிறது
திரையுலகை இக்குரலே
திகைப்பூட்ட வைத்ததனால்
திரையுலகு  இப்போது
தேம்பிநின்று அழுகிறது !

பத்தாயிரம்   பாடல்கள்
பன்மொழியில் பாடியதால்
பலருமே   இசைக்குயிலை
பார்த்துமே வியந்தார்கள்
பரிசுபல  குவிந்தன
பாராட்டும் பெருகியது
பாடிநின்ற   பூங்குயிலோ
பாரைவிட்டுப் பறந்ததுவே !

யாருமே மறக்கார்கள்
ஜானகி அம்மாவைக்
கானக்   குயிலாக
கலக்கினார் இசையுலகை
அவர்குரலில் இனியுலகில்
ஆரிசைக்க வருவார்கள்
அக்குரலை கேட்காமால்
அழவிட்டுப் போனதேனோ!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *