கச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே
=====கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.?
மிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்
=====மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.?
இச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு
=====இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.!
மிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்
=====மேலான மனதை இனிமேற் கொள்வாயே.!

அச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்
=====அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.!
நச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்
=====நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.!
இச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்
=====இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.!
மிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி
=====மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.?

அச்சமிலை அச்சமிலை என்றே முழங்கினான்
=====நன்றே மஹாகவி நல்பாரதி அவரைப்போல
உச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா
=====ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.?
பச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்
=====பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.!
நிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க
=====நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.!
===========================================
நன்றி:: தினமணி கவிதைமணி::18-06-18
நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *