உயர்ந்து நின்றார் காமராசர் !

0


( எம். ஜெயராமசர்மா…… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

இலக்கியங்கள்  இலக் கணங்கள்
எதும் அவர் படிக்கவில்லை
இங்கீலீசு பள்ளிக் கூடம்
எட்டி அவர் பார்த்ததில்லை
தலைக் கனத்தை வாழ்நாளில்
தன தாக்கிக் கொண்டதில்லை
தமிழ் நாட்டின் தலைமகனாய்
தாம்  உயர்ந்தார்  காமராசர்  !

ஏழையென பிறந்த  அவர்
கோழை என வாழவில்லை
தோழமையை மனம் இருத்தி
தோள்  கொடுத்தார் மக்களுக்கு
ஆழ நிறை அன்புடனே
அவர் நோக்கு அமைந்ததனால்
அரசு கட்டில் அமர்ந்தாலும்
அனைவருக்கும் உதவி நின்றார்  !

மாடிமனை  வீடு  எலாம்
வாங்கி அவர் குவித்ததில்லை
மற்றவர்கள் மனம்  வருந்த
சொத்தும் அவர் சேர்த்ததில்லை
கோடிகளில் செல்வம் அதை
கொள்ளை அவர் கொண்டதில்லை
கொள்கையுடன் வாழ்ந்து நின்று
குன்றமென  உயர்ந்து  நின்றார்   !

அரசியலால்  காசு  தேட
அவர்  என்றும்  முயன்றதில்லை
அதிகார  வெறி கொண்டு
அவர் ஆட்சி செய்ததில்லை
அனைவரையும் அணைத்து நிற்க
அவர் மனது விரும்பியதால்
அவர் ஆண்ட  காலமதை
அனைவருமே விரும்பி நின்றார்   !

கல்வி   தேடும்   எழையர்க்கு
கண் ஆனார்  காமராசர்
கல்வி கற்கா  தன்னிலையை
கருத்தில் அவர் இருத்தினரே
எல்லோரும் கல்வி கற்க
எண்ணி  அவர் செயற்பட்டார்
இதனாலே  அவர் என்றும்
இருந்து விட்டார் உள்ளமெலாம்  !

படிக்காத  மேதை  எனப்
பவனி வந்தார்  காமராசர்
படித்தார்கள் நினைவில் வரா
பலவற்றை அவர் செய்தார்
நடித்து அவர் வாழ்ததில்லை
நாகரிகம் பேணி நின்றார்
நம் நாட்டில் அவர்போல
யார் வருவார் நலன்காக்க  !

அரசியலில் அவர் வாழ்வு
அப்பழுக்கு அற்ற தென்று
அரசியலார் சொல்லி நிற்க
அவர் வாழ்ந்து சென்றுவிட்டார்
ஊழல் என்னும் பேய்தன்னை
ஓரங்கட்ட  அவர்  நினைத்தார்
ஊழல் அற்ற தலைமகனாய்
உயர்ந்து  நின்றார்  காமராசர்    !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *