KRISHNA FOR TODAY….!
————————————————-

180718 Krishna Leela A4 wcol charcoal wm

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!

அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

”பாதுகை ஆயிரம்’’….!
————————————————–
பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
ஏந்திச்செல் என்னை எடுத்து….!

அப்பண ஆதி அனந்தன் அமர்ந்தவரே,
சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
கண்ணனை நெஞ்சே கருது….!

வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….!

கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
கோலத் திருவுருவே காப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *