சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்
=====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!
எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்
=====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!
மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது
=====மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!
தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-
=====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.?

தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்
=====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!
இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா
=====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!
ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை
=====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!
வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்
=====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!

ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்
=====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!
கருவிலே இருக்கும் போதே நாங்களும்
=====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!
இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத
=====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.!
உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த
=====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!

===================================================
நன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018
நன்றி கூகிள் இமேஜ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *