ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

கர்ப்பிணிகள் என்றுமவர்

கண்களுக்குத் தெரிவதில்லை

கண்ணிழந்தோர் என்பதையும்

கருத்திலவர் கொள்வதில்லை

புலனிழந்து இருக்கின்றார்

என்றுமவர் பார்ப்பதில்லை

போகமதை மனமிருத்தி

பொறுக்கித்தனம் செய்கின்றார் !

 

ஏழை பணக்காரரென்று

எதுவுமவர் பார்ப்பதில்லை

வாழ்வைத்தொடும் குருத்துக்களை

வதைக்கவவர் தயங்கவில்லை

பட்டினியாய் கிடக்கின்ற

பரதேசி ஆனாலும்

கட்டவிழ்த்து விட்டிடுவார்

காமுகத்தின் கோரமதை !

 

வயதுகூடப் பார்ப்பதில்லை

வக்கிரங்கள் செய்திடுவார்

சபலமனம் கொண்டதனால்

சதிராடி நின்றிடுவார்

கற்பழிப்புச் செய்வதிலே

கருத்தாக இருக்குமவர்

கழுவேற்றி வதைப்பதற்கு

கடுஞ்சட்டம் வரவேண்டும் !

 

கற்பழிக்கும்   கயவருக்கு

காருண்யம் காட்டாதீர்

நட்டநடு வீதிவைத்து

சுட்டிடுங்கள்  தீயாலே

வெட்டவெளி தனில்விட்டு

விட்டெறிங்கள் கல்மாரி

கெட்டவர் அழிவதற்கு

இயற்றிடுவோம் கடுஞ்சட்டம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *