தாயா இவள்?
-திருமதி ராதா
தாய்மை…….
கடவுள் கண்டெடுத்த புதையல்
பிச்சையிட்டு விட்டான்
பாத்திரம் அறியாமலே…..
தவறு செய்தது இறைவன்
பலியானது பச்சிளம் குறுத்துகள்
ஏங்கும் எண்ணற்ற கருவறை இருக்க
ஏனோ இட்டான் பிள்ளை வரம்
இரக்கமற்ற இவளது கருவறைக்கு
மிருகத்திற்கும் உண்டு தாய்பாசம்
இந்த பெண் மிருகத்திற்கு ஏனில்லை
தன் சதை இன்பத்திற்கு
விலைபோனது இவளது பிள்ளைகள்
விலை எதுவானாலும் கொடுக்க
விலைமாதரையும் மிஞ்சி விட்ட இவள்
தாயே இல்லை…..
தாயுருவில் வந்த கசாப்பு கடைக்காரி!