தும்பிக்கையானே நம்பிக்கை
ரா.பார்த்தசாரதி
வேழமுகத்தோடு பிறந்த இறைவனே
முழுமுதற் கடவுளாய் காட்சி அளிப்பவனே
ஔவைக்கு காட்சி தந்த விநாயகனே
மூலைமுடுக்கு தெருவினில் குடிகொண்டவனே !
கல்விக்கும், ஞானத்திற்கும் ஞான முதல்வனே
சிவனின் மூத்த மகனே, வேலவனுக்கு மூத்தவனே
சிவபார்வதியின் அருமை புதல்வனே
முதன்முதலில் அருந்ததியிடம் மோதகம் பெற்றவனே !
கஜமுகாசுரனை அழித்து கணேசா என பெயர்பெற்றவனே
முருகனுக்கு காட்சியளித்து, திருமணம் செய்வித்தவனே
அசுரனை அழித்து எலியாக வாகனம் அமைத்துக்கொண்டவனே
சங்கடம் கொடுக்கும் சனிபகவானை அடக்கி ஆண்டவனே !
மோதகப் பிரியனே, பாம்பினை இடுப்பில் அணிந்தவனே
மஹாபாரதம் எழுத வியாசருக்கு உதவி செய்தவனே
காட்சிக்கு எளியவனே எல்லோராலும் கும்பிடப்படுபவனே
தும்பிக்கையானே நம்பிக்கையுடன் நன்மை தருபவனே !