ரா.பார்த்தசாரதி 

வேழமுகத்தோடு    பிறந்த  இறைவனே
முழுமுதற் கடவுளாய்  காட்சி அளிப்பவனே
ஔவைக்கு  காட்சி தந்த  விநாயகனே
மூலைமுடுக்கு தெருவினில் குடிகொண்டவனே !

கல்விக்கும், ஞானத்திற்கும் ஞான முதல்வனே
சிவனின் மூத்த மகனே, வேலவனுக்கு  மூத்தவனே
சிவபார்வதியின்  அருமை  புதல்வனே
முதன்முதலில் அருந்ததியிடம் மோதகம் பெற்றவனே !

கஜமுகாசுரனை  அழித்து கணேசா என பெயர்பெற்றவனே
முருகனுக்கு காட்சியளித்து, திருமணம் செய்வித்தவனே
அசுரனை அழித்து எலியாக வாகனம் அமைத்துக்கொண்டவனே
சங்கடம் கொடுக்கும் சனிபகவானை அடக்கி ஆண்டவனே !

மோதகப் பிரியனே, பாம்பினை இடுப்பில் அணிந்தவனே
மஹாபாரதம் எழுத  வியாசருக்கு  உதவி செய்தவனே

காட்சிக்கு  எளியவனே எல்லோராலும் கும்பிடப்படுபவனே

தும்பிக்கையானே நம்பிக்கையுடன் நன்மை தருபவனே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *