வழமைகளுக்கும் வாழ்த்து தேவையா?

0

பவள சங்கரி

 

தலையங்கம்

சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற நமது இந்திய இராணுவத்தின் அற்புதமான செயல்பாட்டின் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு செப்டம்பர் 29 ந்தேதி கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அதை நினைவூட்டும் நிகழ்சிகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்பதும், அதற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் அளிப்பதும் எந்த விதத்தில் சரி? இது ஒரு இராணுவ நடவடிக்கைதானே? ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையும் இவ்வாறு தனித்தனியாகப் பாராட்டப்படுவது, அந்த இராணுவத்தின் இதுபோன்ற வழமையான நிகழ்வுகளைக்கூட விழா எடுப்பது சரியான அணுகுமுறையா? இது போன்ற செயல்கள் நம் இராணுவத்தின் உயரிய மாண்பைக் குறைத்து அவர்களின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவதாகாதா? இராணுவம் என்பது தனிப்பட்ட அரசியல் நிகழ்வுகளுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது! உலகின் மொத்த இராணுவங்களின் வரிசையில், தரம் மற்றும் அளவின் அடிப்படையில் 5வது இடத்தில் உள்ள மிகச்சிறப்பான செயல்பாடுகளையுடைய நம் இராணுவத்தை இதுபோன்ற சிறுமைச் செயல்களால் கொச்சைப்படுத்தத் தேவையில்லை! 2 வாரங்களில்  வங்காள தேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்து பாகிசுத்தான் இராணுவத்தைச் சரணடையச் செய்த நம் இராணுவத்திற்கு எந்த வகையில் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தது பல்கலைக்கழக மானியக் குழு? இவையெல்லாம் நமது இராணுவத்தின் தொடர் செயல்பாடுகள் மட்டுமே என்பதுதான் உண்மை!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *