மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக
புரட்டாதி 10, 2049 (26.09.2018)
இந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம்.
என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும்.
ஒன்பதாம் திருமுறை மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா. 301 பாடல்களையும் மொழிபெயர்த்தவர், இசையுடன் பாடுமாறு நான் கேட்டு மொழிபெயர்த்தவர் என் மதிப்புக்குரிய அன்பர் திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.
முன்பு நான் கேட்டுத் திருவாசகம் மொழிபெயர்த்துத் தந்தவர். நூலாக வெளிவந்து, என் வேண்டுகோளை ஏற்ற திருவனந்தபுரம் மன்னர் தம் அரண்மனை வளாகத்தில் அரங்கில் அந்நூலை வெளியிட்டவர். அம்மொழிபெயர்ப்புக்காக, திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.நல்லி திசை எட்டும் விருது பெற்றவர்.
அதற்கு முன் திருமந்திரத்தில் உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால் பத்தாம் திருமுறை முழுவதையும் மொழிபெயர்த்தவர்.
திருக்கோவையாரை மொழிபெயரத்துத் தாருங்கள் எனக் கேட்டுள்ளேன். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் அவன் அருளால் மொழிபெயர்த்துத் தருவார்.