மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++

நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி !
வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !
நேசித்த பெண்டிரில் நான்  வென்றது,
நேசித்த வனிதரில் நான் இழந்தது,
எல்லோரிலும் ஒருத்தியை மட்டும்
இழந்தி ருக்கக் கூடாது நான் !
கோடியில் ஒருத்தி அவள் !
எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்,
இறுதியில் அவளே  வென்றாள்.
தோற்றது நான் !
நானோர் இழப்பாளி !
ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
நானோர் இழப்பாளி !
வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

நான் சிரித்து வந்தாலும்
நகைச்சுவை நாயகன் இல்லை !
முகமூடிக்குக் கீழே
அழுது கொண்டிருக்கிறேன் !
வானிருந்து மழை பொழிவது போல்
வீழும் என் கண்ணீர்த் துளிகள் !
நான் அழுவது எனக்கா ?
இல்லை அவளுக்கா ?
தவறென்ன செய்தேன்
தகாத இந்த தலை விதிக்கு ?  
தாமத மானதென நோகிறேன் !

கர்வம் வரும் முன்னே !
கவிழ்ச்சி வரும் பின்னே !
கதை சொல்வேன் உமக்கெல்லாம்,
கவனம் வைப்பீர்  
இழப்பு எதிரே வரும் முன் !
இழப்பாளி  நான் !  
ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
இழப்பாளி நான் !
வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *