மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழ்த் தழுவல் : சிஜெயபாரதன்கனடா

நீ பொய் சொல்வது
எனக்குத் தெரியா தென்றா
நினைக்கிறாய் ?
உன்னால் அழ முடியாது !
காரணம் நீ
என்னைப் பார்த்து நகைக்கிறாய் .
மனம் உடைந்து போச்சு.

மெய்யாக எனக்கு
எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ?
உன்னால் தான்
குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்,
தெளிவாய் நீ அதைத்
தெரிந்து கொண்டுள்ளாய் !
காதலன் வாங்கிப் போட்ட
மோதி ரத்தை
மாது நீ, தூக்கி எறிந்தாய் !
நாளொரு பொழுதும்
நடக்கும் வேடிக்கை இது !

தனித்தனி
யாய் வாழ்கிறோம்
எவரும் இல்லை நமது
அருகில் !
தொடாதேஎன்று
தடுக்கிறாய் முணுமுணுத்து !
என் மனம் உடைந்து
போச்சு மாதே !
எப்படிச் சிரிப்பு வருது
உனக்கு  ?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *