எண்ணிம எழுத்தும் தரவும்

 

மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும்.

எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் சேர்ந்து வரிகளாகவும் வரிகள் சேர்ந்து பத்தியாகவும் பத்திகள் பக்கங்களாகவும் பக்கங்கள் சேர்ந்து நூலாகவும் உருவாகும்.

எண்ணிம வடிவில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதும்போது சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். வரிக்கும் வரிக்கும் இடையில் இரண்டு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். பத்திக்கும் பத்திக்கும் இடையில் மூன்றெழுத்து இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குறிப்பிட்ட காலி இடம் இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல் ஆய்வு இதழில் கொள்கையாகவும் வடிவ அமைப்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழுக்கு இதழ் மாற்றம் இருக்கும் என்பதால் ஆய்வுக் கட்டுரை எழுதும் முன் அந்த இதழைப் பார்க்க வேண்டும்.

ஆய்வாளர் கட்டுரை எழுதும்போது காகிதத்தில் பேனாவில் எழுதி திருத்தங்கள் செய்து கணிணியில் எண்ணிம வடிவில் பதிவிடலாம் அல்லது நேரடியாகக் கணினியில் பதியலாம். கணினியில் பதிவிடும்போது முதலில் கட்டுரைக் குறிப்புகளை நோட் பேடில் வரியாகப் பதிவிடலாம். மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் எழுதுவதைவிட இதுவே சிறந்தது.

கணினியில் மென்பொருள் மூலம் வடிவ மாற்றம் செய்ய இயலும். கணினியில் சொற்கள் மட்டும் உள்ள பதிவுகள் வரிவடிவில் இருக்கும். எழுத்தில்லாமல் உருவம் அமைந்தால் அது பட வடிவம். ஒலி வடிவிலும் உருவாக்கலாம். இவை எல்லாம் தனித்தனி ஊடக வடிவங்களாகும். ஒன்றோடொன்று இணைந்தால் அதுவே பல்லூடக வடிவத்தைப் பெறும்.

இணையத்தில் வெளியாகும் ஆய்வுகள் வரி வடிவிலும் ஒலி வடிவிலும் ஒளிக்காட்சி வடிவிலும் அமையலாம். பல்லூடக வடிவில் அமைவது மேலும் சிறப்பானதாக அமையும். அச்சு ஊடகத்தில் இதுபோன்ற முயற்சி செயல்பட வாய்ப்புகள் குறைவு.

நாகராசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *