மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

 

ஈராறு முகம் உடையான்
எண்ணியதை எமக் கருள்வான்
பார்மீது நாம் வாழ
பல எமக்குத் தந்திடுவான்
கோல மயில் அமர்ந்திருந்து
கொடுத்து நிற்பான் வரமெல்லாம்
சீலமுடை சிவன் மைந்தன்
திருவடியை தினம் தொழுவோம் !

சஷ்டியை பிடித்து நின்றால்
தரித்திரங்கள் அகன்று விடும்
சந்ததியும் தளைத்து நின்று
சரித்திரமும் படைத்து விடும்
உத்தமராய் வாழும் எண்ணம்
உள்ளம் அதில் எழுந்துவிடும்
உமை மைந்தன் திருவடியை
உவப்புடனே பணிந்து நிற்போம் !

ஆலகால விஷம் உண்ட
அரன் மைந்தன் கந்தனது
கால் அடியைப் பற்றுதற்கு
கந்த சஷ்டி துணையாகும்
சீலமுடன் நாம் இருந்து
தினமும் அவன் திருநாமம்
காதலுடன் ஓதி நின்று
கந்தன் கோவில் சென்றிடுவோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *