பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்
திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழ் வணிகரின் கடல்வழிப் பாதை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணிம வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
கடல் வழியை அடிப்படையாகக் கொண்டால் உலகை வடக்கும் தெற்குமாகப் பிரிக்கும் இடம் பண்டைய எகிப்து எனக் கருதலாம். பழந்தமிழர்களுக்கு எகிப்துடன் நெடுங்கால வணிக உறவு இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் சுட்டும்.
தரைவழிப் பாதையாக உலக வணிகர்கள் பயன்படுத்திய பாதைகள் சந்திக்கும் இடம் எகிப்து என்றாலும் வடக்கையும் தெற்கையும் பிரிக்கும் எகிப்தின் சிறிய நிலப்பரப்பைத் தாண்டி செங்கடல் வழியாகத் தெற்கில் வரும் சூக்குமம் தமிழர்கள் நன்கறிந்து காற்றின் போக்கில் கடல் வழியாகச் செங்கடலை அடைந்து அலெக்ஸ்சான்ட்ரியா வழியாக கிரேக்க உரோமாபுரி வணிகத்தை மேற்கொண்டனர்.
மேலும் தமிழ் வணிகர்கள் இந்துமாக்கடல் பசிபிக் கடல் மேலாண்மையில் சிறந்து சிறு தீவுகளை இணைத்து கடல்வழியை உருவாக்கினர். அங்கே தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களையும் தோற்றுவித்தனர்.
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த ஆய் நாடு உலக வணிகத்தைக் கிழக்கிலும் மேற்கிலும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக அமைந்திருந்தது. தமிழர் வரலாற்றில் ஆய்நாடு தொடர்பான தகவல் கடலுக்கடியில் புதைந்துள்ளது.
ஆய்நாடு அழிந்த நிலையில் ஆய்வேளிர் இடம்பெயர்ந்து கொங்கு நாட்டை உருவாக்கி கடல் வணிகத்தைத் தொடர்ந்தனர். மூவேந்தர் கீர்த்தியைப் பாடிய தமிழ் வரலாற்றாளர் கொங்கின் சிறப்பை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.
இளம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்
நாகராசன்