எண்ணிம தமிழர் வாழ்வியல் ஆய்வுப் புலம்

0

பேரா. நாகராசன்

 

கணினிப் புரட்சியும் இணைய வளர்ச்சியும் எண்ணற்ற கருத்து வளங்களை இணையத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. தமிழின் இலக்கிய வளங்கள் இன்று இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எண்ணிம நூலகங்களில் கிடைக்கின்றன. இணையத்தின் நுட்பம் அறிந்தவர்கள் வலைத்தளம் மூலமாகவும் மடலாடல் குழு மூலமாகவும் தமிழர் வாழ்வியல் தொடர்பான கருதுகோள்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

சமூக ஊடகங்கள் தங்கள் பங்குக்கு தமிழர் வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற வளங்களை பல்லூடக வடிவில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் புலவர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த தமிழர் வாழ்வியல் இன்று இணையவெளியில் கட்டற்ற கருத்துகளாக வெளியாகின்றன.

புதிய ஆய்வுப்புலமாக உருவாகியுள்ள எண்ணிமத் தமிழர் வாழ்வியல் ஆய்வு சமூகவியல், மானுடவியல் உளவியல், ஆய்வுத்தளங்களையும் இணையத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆய்வுப் புலத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் புதிய ஆய்வு முயற்சியைப்பற்றி இனிவரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *