——————————————————————————–
நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும்
இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….!
————————————————————————————-
(காப்பு)
———
‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
கருணா கரர்காம கோடி -உருவாய்
அரனா கவந்து அரணாக நின்றோய்
வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….!
—————————————————————————————–
‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….!
—————————————————————————————
முன்கதை சுருக்கம்
————————–

“பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
உலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….!

ஆதிசங்கரர் கேள்வி….
————————–

“யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
அத்தா மலக அமுது”…..(1)….!

அத்தாமலகர் பதில்…..
—————————-
“பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
“நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
நானல்ல, நானுணர்வே நான்”….(2)….!

“காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….!
(OR)
எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….!
எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….!

“கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
நாதனே, என்றுமுள நான்”….(4)….!

“ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….!

“முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….!

“எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-
கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,
நன்மையா னந்தமே நான்’’ ….(7)….!

“கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….!

’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….!

’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….!

”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,
வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….!

”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….!

’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
நிற்போனே நிர்மல நான்’’….(13)….!

“செய்யும் முறையதால் ஸ்படிக நிறம்மாறும்,
அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….கிரேசி மோகன்….!
(சுபம்)
(முடிவு)
(மங்களம்)
——————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *