நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

நாம இருக்க இந்த ஒலகத்த வாழ வெக்கதால மழைய அமிழ்தம் னு சொல்லுதோம்.

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

வயக்காட்டுல வெளைச்சலுக்கு உதவுத மழைத் தண்ணி , பொறவு வெளஞ்சத வச்சி தின்னும்போதும் தாகத்துக்கு குடிக்கவும் ஒதவுது.

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

ஒலகத்த சுத்தி கடல் தண்ணி இருந்துச்சினாலும், மழ பெய்யலேனா வெள்ளாம பாக்க முடியாம வயித்து பசி மனுசன வாட்டி வதைக்கும்.

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மழை ங்குத வருமானம் இல்லைன்னா வெவசாயி வெள்ளாம பாக்க மாட்டான்.

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

பொழியாம சனத்த நோகடிக்குத மழை பொறவு பொழிஞ்சு அவுகளுக்கு ஆதரவா நல்லதும் செய்யும்.

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

வானம் பாத்த பூமியில மழத்துளி விழலேன்னா புல்லோட தலையக் கூட காங்க முடியாது.

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மேகம் கடல்லேந்து மோந்த தண்ணிய திரும்ப மழையா பொழியாம உட்டிச்சிதுன்னா கடல் தண்ணியும் வத்தி போவும்.

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழ பெய்யாம போச்சுன்னா சாமிக்கு தினமும் பூசையும் நடக்காது, வானவர்க்கு நடக்க திருவிழாவும் நடக்காது.

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
இனம் வழங்கா தெனின்

மழை பெய்யாமப் போச்சுதுன்னா மத்தவனுக்கு தானமும் செய்ய இயலாம , தான் நோம்பு இருக்கவும் மாட்டாம மனுசனுக்கு தடங்கலா வந்து முடியும்.

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

எத்தாம்பெரிய மனுசனாலயும் தண்ணி இல்லாம இருக்க முடியாது. அந்த தண்ணிய கொடுக்குத மழை பெய்யாம போச்சுதுன்னா ஒலகம் ஒழுக்கங் கெட்டுச் சீரளியும் னு உணந்து நடக்கணும்.

******************************

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *