இந்த வார வல்லமையாளர் (298) – ஜார்ஜ் பெர்னாண்டஸ்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes (ஜூன் 3, 1930 – ஜனவரி 29, 2019), ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்
வாஜ்பாயி மந்திரிசபையில் இந்தியா அணுகுண்டு செய்யவும், அதன் மிஸைல்ஸ் புரோகிராமுக்கு அப்துல் கலாம் தலைவராக இருக்கும்போதும் வேண்டிய தலைமையை நல்கியவர். 1998-ல் பாரத அணுசோதனை வெற்றி – வாஜ்பாயி, ஜார்ஜ், கலாம், சிதம்பரம் (இந்திய அணுவியல் துறை தலைவர்), காஷ்மீர் பரூக் அப்துல்லா.
எமெர்ஜென்சி பிரகடனம் இந்திரா காந்தி அறிவித்தபின்னர் இந்தியாவின் பிரதமருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். என்றும் ஈழ நாடு அமையத் தமிழர்கள் பக்கம் இருந்தவர்
1976 ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். அவரது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி போலீஸார் கொடுமைப்படுத்தினர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது விலங்கிடப்பட்ட கைகளை உயர்த்தி, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று துணிச்சலாக முழக்கமிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தே விண்ணப்பித்தார். தொகுதிக்கே செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வெற்றிபெற்றார்.
இந்திரா காந்தி தோல்வியைத் தழுவினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி ஜார்ஜை தேடி வந்தது. வழக்கம்போல எளிய பைஜாமா குர்த்தாவில் ரயில்வே அமைச்சராக ரயில் பவனில் நுழைந்தபோது, அங்கிருந்த வாயிற்காவலர், “யார் நீங்கள்? உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு இருக்கிறதா?” என்று கெடுபிடி காட்டினார். அப்போது, “நான்தான் ரயில்வே அமைச்சர்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார்.
பாஜகவுக்கு அவர் வழங்கிவந்த நிபந்தனையற்ற ஆதரவைப் பார்த்தவர்கள் மதச்சார்பின்மை குறித்து உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது “இந்தியர்களை மதச்சார்பற்றவர்கள், சாதாரணமானவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். நான் சாதாரணமானவர்களின் பிரிவைச் சேர்ந்தவன்” என்றார்.
Obituary in BBC. இந்திய பிரதமர் மோதியின் ட்வீட்கள் வாசிக்கலாம்,
https://www.bbc.com/news/world-asia-india-47039190
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )