திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  குலத்திருமகன்! அரசரின் வளர்ப்புப்பிள்ளை! அவருடன் இவர்க்கு எப்படி வழக்கு இருக்கக்கூடும்?  இதென்ன புதிய இடையூறு!’’  என்று எண்ணினர்.

முறைப்படி அந்த  மூத்த அந்தணரை வரவேற்று , ‘’உங்கள்வரவு எங்கள் தவப்பயன்! நீங்கள் உங்கள்கருத்தைக்  கூறுங்கள் ‘’ என்றுஒப்புதல்அளித்தனர். பழங்கால முறைப்படி அந்த  அவையினரிடம் ஒப்புதல் பெற்ற மூத்த அந்தணர்,

கூறிய வாசகம் கேட்ட  சபையினர்  மிகவும் வியந்தனர்!  சுந்தரர் சிரித்தார் முதியஅந்தணரிடம்  ‘’எனக்கும்  உங்களுக்கும்  இடையில் உள்ள  வழக்கை முடித்தபின்னரே, திருமணம்புரிந்துகொள்வேன்! ‘’ என்றார் .

அவையில் தம்மை இகழ்ந்து சிரித்த சுந்தரரிடம், தம் உத்தரியத்தைத் தோளில் அணிந்தபடி சென்று’’ அந்தக் காலத்தில் உன்தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனார்   உங்கள்   பரம்பரைக்கே எழுதிக்  கொடுத்த அடிமைச்சாசனம் இது!’’

இதனைக் கண்டு,  அடே  , சிறுவா! சிரித்தது ஏனடா?’’ என்றார்! அவையினர்  அதிர்ச்சியடைந்தனர் சுந்தரரோ, ‘’அந்தணர்  இன்னோர் அந்தணருக்கு  அடிமையாதல் உண்டோ? இக்கிழவன் பித்தனோ?  ‘’ என்றனர்!

உடனே மூத்தஅந்தணர்,  ‘’ நீ எத்தகைய தீச்சொற்களையும் அபவாதத்தையும் சொன்னால்,  அதற்கெல்லாம் யான்   வெட்கமடைய மாட்டேன்! அந்தஅளவுக்குப் பெரியனாகிய நீ என்னை  நன்றாக அறிந்துகொண்டிருந்தால்,  இப்படி அறிந்தவன்போல்  என்னெதிரில்  நின்று அறிவுவாசகம் பேசவேண்டா!  நீ எனக்கு  இப்போதே  அடிமைப்பணி  செய்ய வேண்டும்!’’ என்றார்!

இதனை  அந்த அந்தணர் கூறும்போது,’’நீ என்னை நன்றாக அறிந்துகொள்ளவில்லை ! ‘’ என்றுகூறித் தம்  உத்தரியத்தைத் தோளில்  அணிந்துகொள்வது போல், தம் நஞ்சுண்ட  கண்டத்தைக் காட்டினார்! அந்தஅளவுக்கு நீ  இந்த இளம்பெண்மேல் மையல் கொள்ளும் மானுடமாய், மயங்கி,  என்னை நோக்கி, இழிந்த  சொல்லாகிய ‘’பித்தன்’’ என்றாய்! அவ்வாறே நான்  பித்தனும், பேயனும் ஆகிறேன்!  இப்போது உன்  பழைய  நினைவு வந்து என்னை அறிந்து கொள்ள வில்லை! ஆதலால் வித்தகம்பேசுகிறாய்!’’ என்றார் .  சுந்தரர் தம் அரசவாழ்வு,  அந்தணப் பெருமை இவற்றால் உயர்வு மனப்பான்மை   மயக்கத்தில், தம்நிலை அறியாமல் இருந்தார்! ‘’உடனே, எனக்கு அடிமைப்பணி செய்!’’ என்று  ஆணையிட்டார்! இவற்றையெல்லாம் விளக்கும் வகையில் சேக்கிழார் பெருந்தகை ,

“பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்” என்றார் 

என்று பாடியுள்ளார்! உள்ளாழ்ந்த   பெருந்தன்மையும் ,  பெருமையும்   சற்றே மோதிக்  கொண்ட  அரிய நிகழ்ச்சிஇது!  தொடர்ச்சியை மேலும்காண்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *