வேதாளங்கள் வாழும் கன்னக்குழி
– கவிஞர் பூராம்
முகத்தின் அருகில் நிலவின் ஒளி
அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
முகம்பாா்க்கத் துண்டும் அவளின் கன்னக்குழி!
பூமுகத்தில் வாசனைச் சிரிப்பில்
அடிமைப்படுத்தும் ஆவேசத்தோடு
மனம் அப்பிக்கொண்ட முகத்தில்
வெட்கமில்லாமல் நானும்
அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…
ஆனந்தத்தில் தோன்றி மறையும்
இறைகுழி அவள் கன்னத்தில்,
வேறொன்றும் அறிய மறுக்கும்
அறியாமையுடன் நான்
அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…
தொிந்துதான் இருந்தது அவளுக்கு
ரசிக்கும் ஆன்மாவின் அன்பு
சொல்ல மறுக்கும் அவளும்
சொல்லத் தயங்கும் நானும்
தன்முனைப்பின் உச்சத்தில்
அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
தப்பித்துக்கொள்ள தனியறையில்…
பாம்பின் விடத்தோடும் ஆதி கனவுகளின்
மங்களான நினைவோடும்
அவளது கன்னக்குழி கண்ணின் பாவையாய்!
அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
அவளாகிப்போனேன் அவளில்லாமல்!