-சேஷாத்ரி பாஸ்கர்

இன்றைய நாளிதழ் அபிட்சுரி வயிற்றை கலக்கவில்லை
கடன்காரர்கள் யாரும் அழைப்பு மணி அமிழ்த்தவில்லை
வெயில் இன்று கம்மி என்று யாரோ சொல்ல காதில் விழுந்தது
விடுமுறையில் பசங்களும் பறவைகளும் போடும் கூச்சல் ரம்மியமாகத்தான் இருக்கின்றன
எந்த மாத்திரையும் இப்போது தேவைப்படவில்லை
இருக்கும் இருநூறில் உலகம் தெரிகிறது
வேலைகள் யாவும் நானின்றி நடக்கின்றன
கடக்கும் காலங்கள் கரையேறி சிரிக்கின்றன
எப்போதும் போல் இரவு தூக்கத்திற்காக காத்திருக்கிறேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *