-மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்!

மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்!

நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்!

எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *