சத்தியமணி

புன்னகை யிருக்க பூமிக்கு சிரிக்கவழிச்
சொன்னவன் சென்று விட்டான் …….1

நகைப்பினில் மின்னல் தெறிப்பவர் கண்டு
திகைப்பது வைகுந்தமோ சொல்? ……..2

சிரித்திட நேரத்தில் சிந்தனைக்கு விருந்தும்
இனித்தரப் போவது யாரோ ………3

மோகனைக் கண்டதும் விரிந்திடும் இதழ்களில்
வேதனைச் சுமையால் வலி ………4

கேசவன் வண்ணம் கிரேசியின் எண்ணமினி
வாசகன் ரசிக்க இல்லை ………5

பைத்தியம் என்றுனைப் பட்டம் இட்டதற்கு
புத்திக்கு புரிந்ததே இன்று …….6

வெண்பா விரித்து விளையாட்டு புரிந்தவனை
மண்பால் பிரித்தவர் யார் ………7

வெண்பா விழைந்து அன்பால் மகிழ்ந்து
மண்பா வையினிடமுன் நட்பா ………8

வல்லமைப் பக்கமாய் வந்ததனால் பழக்கம்
எல்லாமோ சிறிது காலம் ? ………9

அத்தி வரதன் தத்தி வருமுன்னே
முந்தி நீயவன டியிலே ……..10

ஆன்மா அமைதியுறுக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *